சாம்ராஜ்நகர்: இந்தியாவில் தனிநபர்கள் சாட்டிலைட் போன் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து மர்ம நபர்கள் வெளியாட்களுடன் இந்த போன் மூலம் பேசியுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கர்நாடக போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சந்தன கடத்தல் வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் இருந்து சாட்டிலைட் போனில் மர்ம நபர்கள் பேசியதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.