இலங்கையின் காலி துறைமுகத்தில் முதன் முறையாக, கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தை, கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, நீருக்கடியில் சென்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.