ஸ்ரீகாகுளம்: சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மிதந்தபடி யோகாசனங்களை செய்தார். தரையில் செய்வது போன்றே சிலர் தண்ணீரிலும் மிதந்து யோகா செய்வது வழக்கம். இதன் மூலம் உடலும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மிதந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்தார்.