நெல்லை: சென்னை மற்றும் மும்பையில் இருந்து தூத்துக்குடி வழியாக விமானத்தில் நெல்லை வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் மும்பையில் இருந்து விமானம் மூலம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த சிலர், வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கினர். இவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், ஒரு வாகனத்தில் வண்ணார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர். இங்குள்ள தனியார் விடுதியில் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.