டெல்லி: டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் 3வது தளத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அருகில் உள்ள மக்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தீயணைப்பு துறையினருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. தொடர்ந்து, சுமார் ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு துறையினர் ஒருவழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.