கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே பார் ஊழியரை கொலை செய்துவிட்டு, தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர் அருகே ஓட்டேரி விரிவு பகுதியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலை மேம்பாலம் உள்ளது. இதன் கீழ்பகுதியில், அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஓட்டேரி விரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகில் சுமார் 36 வயது வாலிபர் சடலம் கிடப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, முதுகு, கை, கால், கழுத்து உள்பட உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலம் கிடந்தது.