சென்னை: ராணுவ வீரர் மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழக ராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தவிர்த்து அமைதியான சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ராணுவ வீரர் பழனி, சீன ராணுவத்தோடு நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற துயர செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.