சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் வாங்கப்பட்ட ஹை புளோ ஆக்சிஜன் கருவிகள் சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதிகளவிலான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் வாங்கப்பட்ட ஹை புளோ ஆக்சிஜன் கருவிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இருதய பிரச்சனை, நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அதிகளவிலான மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்படுவோரில் 50 வயதை கடந்தவர்கள் உயிரிழக்க நேர்கிறது. இந்நிலையில் அதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் ஹை புளோ ஆக்சிஜன் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.