லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் இறந்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் இறந்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சீனப்படைகள் தங்கள் நிலைகளை மாற்றிய போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் சீனா, இந்தியா என இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நடவடிக்கைகள் அனைத்தும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தது. இந்தியா எல்லை தாண்டியதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக சீனா கூறியிருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: