ரோடு முழுக்க பள்ளம்தான் சார்...புடிச்சு ஜெயில்ல போடுங்க எஜமான்... தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக போலீசில் வழக்கு

முசாபர்நகர்: சாலையில் இருந்த பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தினால் நிலைதடுமாறி இருசக்கர வாகனம், சாாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் காயமடைந்தார்.

 

இந்நிலையில் சாலையில் பள்ளம் இருந்ததால் தான் விபத்துஏற்பட்டதாகவும் ஏராளமான பள்ளங்கள் சரிசெய்யப்படாமல் உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது இறந்தவரின் உறவினர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: