ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து நகை, பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போகலூர், பரமக்குடி, சத்ரகுடி உள்ளிட்ட பகுதிகளில் இளம் பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்களை பின்தொடரும் கும்பல், அவர்களுடன் பேசி பழகி பின்னர் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். அந்த பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து பின்னர் அதனை காட்டி கூட்டு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை காரில் கடத்தி சென்று ஆபாசமாக படம் எடுத்தும் இந்த கும்பல் மிரட்டி வந்துள்ளது. தொடர்ந்து, காட்டுப்பகுதிகளில் முயல், மயில்களை வேட்டையாடுவதும் பின்னர் போதை ஏற்றிக்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபடுவதையும் இந்த கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வந்துள்ளது.