புழல்: சென்னைவாசிகள் வருகை அதிகரித்ததால் கொரோனா பரவலை தடுக்க சோழவரம் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சோழவரம் அடுத்த பெருங்காவூர் செல்லும் சாலை மற்றும் ஞாயிறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதில், சோழவரம், அருமந்தை, ஞாயிறு, பெருங்காவூர், விச்சூர், செங்குன்றம் மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து பல்வேறு குடிமகன்கள் அதிக அளவில் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.