சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே பழனி என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கே.பழனி நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளுக்கு வெளியே சென்றபோது கொரோனா பரவி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எம்.எல்.ஏ- விற்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.