உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மக்களின் மீது விழ காத்திருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உசிலம்பட்டி-மதுரை சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயிலில் பல வருடங்களாக பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த சாலையில் அதிகமான போக்குவரத்து உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் நடந்துசெல்லும் போது, சாதாரண காற்று அடித்தாலே மரக்குச்சிகள் ஒடிந்து விழுகிறது. இதனால் பலமுறை மக்கள் தலையில் குச்சி விழுந்து காயமடைந்துள்ளனர். தற்போது காற்றடி காலம் என்பதால் இந்த மரக்குச்சி மற்றும் பெரிய மரத்தின் காய்ந்து போன கிளையும் ஒடிந்து விழும் அபாயம் உள்ளது.