திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14ம் தேதி மாலை நடை திறக்கப்படும். திருவிழாவை ஒட்டி 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு 10ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரின் கடிதத்தை தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்படவில்லை.