சபரிமலை ஆனி மாத பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14ம்  தேதி மாலை நடை திறக்கப்படும். திருவிழாவை ஒட்டி 14ம் தேதி  முதல் 28ம் தேதி வரை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு 10ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரின் கடிதத்தை தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று  கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் திருவிதாங்கோடு தேவசம்ேபார்டு உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆனி மாத பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 முதல் நடக்க இருந்த நாள் திருவிழாவை தள்ளி வைக்கவும் முடிவு ெசய்யப்பட்டது.

Related Stories: