சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு தலா ரூ 10000: முதல்வர் ஜெகன்

அமராவதி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.  இதனால் பல்வேறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்கள் முடங்கின. குறிப்பாக சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  எனவே, அவர்களுக்கு  மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் மற்றும் தொழிலை மீட்டெடுக்க கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என மொத்தம் 2.47 லட்சம் பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: