மனித உடலில் ஒட்சிசனை அனைத்து பாகங்களிற்கும் எடுத்துச் செல்லும் பணியை இரத்தத்தில் உள்ள கூறுகளுள் ஒன்றான செங்குருதிச் சிறுதுணிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான செங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையான முறையில் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். உயிரியல் கூறு மற்றும் ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்ட பொலிமர் என்பவற்றினை இணைத்து செயற்கை முறையில் செங்குருதிச் சிறுதுணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.