இளம்பிள்ளை: உலகம் முழுவதும் விவசாய பயிர்களை அழித்து, விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் மின்பொறியை உருவாக்கி, சேலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அசத்தியுள்ளார். கொரோனா வைரசுக்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திராவில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமாக படையெடுத்து வரும் இந்த வெட்டுக்கிளிகள், பல்லாயிரக்கணக்கான பயிர்களை கபளீகரம் செய்து அழித்து வருகிறது. இதனை ஒழிக்க வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி வி.பி.எஸ்.காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சுரேஷ்குமார்-ரேவதி தம்பதியின் மகனான இன்ஜினியரிங் மாணவர் உதயகுமார்(19), வெட்டுக்கிளியை கவர்ந்து அழிக்கும் மின்பொறியை உருவாக்கியுள்ளார்.
விவசாய பயிர்களை பாழாக்கி வரும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின்பொறி தயாரிப்பு: சேலம் இன்ஜினியரிங் மாணவர் அசத்தல்
- சேலம் பொறியியல் மாணவர் உதவியாளர்
- சேலம் பொறியியல் மாணவர் தாக்குதல்: வெட்டுக்கிளி விவசாய பயிர்களை அழிக்கிறது