தென்காசி: குற்றாலத்தில் நேற்று முன்தினம் மெயின் அருவியில் தண்ணீர் விழத் துவங்கிய நிலையில் நேற்று பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் கொட்டியது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அறிகுறி கடந்த 2ம் தேதி தென்பட்டது. இதைதொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த மழையால் நேற்றுமுன்தினம் மெயின் அருவியில் தண்ணீர் விழுந்தது. இதனால் குற்றாலம் சீசன் துவங்கிவிட்ட நிலையில் இரண்டாவது நாளான நேற்று பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது.