சென்னை: தமிழகத்தில் 144 தடை தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜூன் 5ம் நாள் காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பிறந்தநாள் சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. ஜூன் 5ம் நாள் அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார். 144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.