சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 17,598-ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 68.64 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் முக்கியமான 7 மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 3,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,034 பேர் குணமடைந்துள்ள நிலையில் 158 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :ராயபுரம் – 3,224கோடம்பாக்கம் – 2,029திரு.வி.க நகரில் – 1,798அண்ணா நகர் – 1,525தேனாம்பேட்டை – 2,014தண்டையார் பேட்டை – 2,093வளசரவாக்கம் – 939அம்பத்தூர் – 651அடையாறு – 1,007திருவொற்றியூர் – 610 மாதவரம் – 431பெருங்குடி – 301சோளிங்கநல்லூர் – 306ஆலந்தூர் – 261 மணலி – 246 பேர்...தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் நேற்றைய விவரத்தின் படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8,405 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.