பாட்னா: உலகம் முழுவதுமான ஊரடங்கின் போது, அனைத்து தொழில்களும் துறைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆணுறை விற்பனை, பெண்கள் கர்ப்பம் தரித்தல் ஆகியவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஊரடங்கால் சிக்கி பல்வேறு மாநிலங்களில் தவித்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், தற்போது தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிமுறையின்படி, இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள், சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.வெளிமாநிலங்களில் தனிமையில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வீட்டிக்கு சென்று மனைவியை பார்த்ததும் பரவசத்தில் பாசமழை பொழிந்து விட வாய்ப்புள்ளது. இதனால், தேவையற்ற கர்ப்பங்கள் அதிகரிக்கும் என பல்வேறு மாநில அரசுகள் அச்சப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பீகார் அரசு நூதனமான ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.