சென்னை: குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா ேபான்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் கீழ் குட்கா பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.