வருசநாடு: சோலார் விளக்குகள் பழுதடைந்ததால், வருசநாடு அருகே மலைக்கிராமங்கள் இரவு நேரங்களில் இருளில் மூழ்குகின்றன. இதனால் மக்கள் அவதியடைகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் நொச்சிஒடை, வெள்ளிமலை, குழிக்காடு, மேலபொம்மராஜபுரம், வடக்குஅரசரடி, பொம்மக்கடவு ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள தெருக்களில் மேகமலை ஊராட்சி சார்பில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கும் சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த சோலார் விளக்குகள் ஒட்டுமொத்தமாக பழுதடைந்துள்ளன.