சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்பதால் விவசாயிகளும் குறுவை சாகுபடி செய்ய மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு சுமார் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.இதன் மூலம் கடந்த காலங்களில் விவசாயிகள் விவசாயத் தொழிலால் அடைந்த பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து ஓரளவுக்கு மீள முடியும்.