பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், முடங்கி கிடந்தார். அவ்வழியாக சென்ற இளைஞர்கள் விக்னேஷ், அஜீஸ் ஆகியோர் முதியவரை எழுப்பி நீங்கள் யார், எந்த ஊர் என விசாரித்துள்ளனர். அந்த முதியவர் கண்ணீருடன், அதிராம்பட்டினத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்றும், வீட்டை விட்டு வெளியே வந்த எனக்கு திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாததால் கடந்த 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் படுத்துக்கிடந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள், உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்துகொடுத்து சாப்பிட வைத்தனர். அந்த முதியவரை போட்டோ எடுத்து அதிராம்பட்டினத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர்.