மேலூர்: மேலூர் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் கிணற்றில் விழ, போலீசார் அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலூர் அருகே ஆட்டுக்குளம் பகுதியில் 2 வயதுள்ள பெண் புள்ளிமான், கொட்டாம்பட்டி அருகே கொட்டகுளம் பகுதியில் 6 மாத புள்ளிமான் என 2 மான்கள் நேற்று முன்தினம் நாய்கள் கடித்து குதறியதில் இறந்தன. இந்நிலையில் நேற்று கீழவளவு அருகில் உள்ள குழிச்சேவல்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த புள்ளிமான் நிலை தடுமாறி கிணற்றில் அப்படியே விழுந்தது. தண்ணீரில் மான் தத்தளிப்பது குறித்து கீழவளவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.