குமாரி : கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டி எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 720 மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய பதில் அளிக்காததால் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதாக இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.