சின்னாளபட்டி: மதுரை-திண்டுக்கல் சாலை அம்பாத்துரை பாலத்தில் ஆபத்தான முறையில் உள்ள உடைந்த இரும்பு தடுப்புகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் தேசிய நான்குவழிச்சாலையில் அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் வந்த கன்டெய்னர் லாரி இப்பாலத்தின் இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து கொண்டு விபத்தில் சிக்கியது. இதை தொடர்ந்து லாரி மீட்கப்பட்டது.