ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் காட்டு யானைகள், தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் மா, தென்னை, வாழை போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில், மாமரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. மேலும் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து, தென்னங்குருத்தை சாப்பிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து மாம்பழ குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் கூறுகையில்,