சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குற்றத்தடுப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் உட்பட 12 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதையடுத்து மாநகர காவல் துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குற்றத்தடுப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் மற்றும் யானைகவுனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட மாநகர காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.