புழல்: அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி உள்பட புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவைச் சேர்ந்த வெல்டிங் பழனி (41) என 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஒரு சிலருக்கு 7 ஆண்டு மற்றும் ஒரு சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த வெல்டிங் பழனிக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சிறையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் அவர் தங்கியிருந்த சிறைக்கு கழிவறைக்கு பின்புறம் உள்ள ஜன்னலில் பெட்ஷீட்டை எடுத்து கயிறுபோல் திரித்து தூக்கு மாட்டிக்கொண்டார்.