மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள பட்டவர்த்தி காட்டுத்தெரு பகுதியில் சுமார் 75 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குறுவை விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயத்தை ஆரம்பிக்கும்போதே பிப்ரவரி மாத இறுதியில் காட்டுத்தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் புகைந்து விட்டது. அந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியத்துறையினர் கழட்டி சென்று ரிப்பேர் செய்து கொண்டு வந்து மாட்டினர், மார்ச் மாதத்தில் மீண்டும் எரிந்து சேதமானது, தற்பொழுது 3வது முறையாக டிரான்ஸ்பார்மர் புகைந்து விட்டது. விவசாயிகளே டிரான்ஸ்பார்மரை சரி செய்ய கொண்டுசென்றால், இந்த டிரான்ஸ்பார்மரை எத்தனை முறை காயில் சுற்றினாலும் எரிந்துதான் போகும் என்று கைவிரித்துவிட்டனர்.