கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே குமாரபாளையத்தில் உள்ள பிடாரியம்மன் கோயில் முன் உள்ள வேலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்பை மர்ம நபர்கள் குத்தி சென்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயில் முன் நேற்று மாலை 7 மணியளவில், மர்ம நபர்கள் சிலர் 6 அடி கொண்ட சாரைப்பாம்பை துண்டு துண்டாக வெட்டி கோயில் முன் உள்ள வேலில் குத்தி வைத்து சென்று விட்டனர்.