ஆந்திர மாநிலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கி, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதேபோன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பும் நடத்த முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், ஆந்திர மாநில அரசு நேற்றுமுன்தினம் ெவளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கலாம். அரசு அலுவலகங்கள், சாலைகள்,  அருங்காட்சியகம், பூங்கா, கோயில், உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இலவசமாக படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: