புதுடெல்லி: இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாடு முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுடன் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. எந்தெந்த நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் வழங்க அனுமதிப்பது என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இணையதளம் மற்றும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கும் முன்பதிவு சேவை கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 1.7 லட்சம் பொதுசேவை மையங்கள் மூலம் அவர்களுக்கும் முன்பதிவு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.