திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் நடந்த, ரவுடி கொலை வழக்கில், மேலும் இருவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த திருமழிசை உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தன்(38). மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியான இவர், கடந்த மாதம் 23ம் தேதி இரவு, வீட்டின் பின்பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து, இதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர்(18), பிரபாகரன்(19), பழனி(19) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.