திருவனந்தபுரம்: கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர்களே எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் லாக்-டவுன் காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. சவரக்கத்தி, கத்தரி, டவல் போன்றவற்றை பலருக்கும் பயன்படுத்துவது மற்றும் மிக நெருக்கமாக இருப்பது போன்ற செயல்களால் கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நோய் தீவிரம் குறைந்த பகுதிகளில் நிபந்தனைகளுடன் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் நேற்று முதல் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.
வெட்டிவிடுவோம்... ஆனா... தலைமுடிய எடுத்துட்டு போயிடணும்: கேரள சலூன், அழகு நிலைய கூட்டமைப்பு அறிவிப்பு
- கேரள வரவேற்புரை
- அழகு நிலையம் கூட்டமைப்பு கேரள வரவேற்புரை அறிவித்தது
- அழகு நிலையம் கூட்டமைப்பு அறிவிக்கிறது