ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை பிடித்து வந்தனர்.