தஞ்சை: தஞ்சையில் இருந்து தனி ரயிலில் உத்தரபிரதேசத்துக்கு 515 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை தனி ரயில்களில் அனுப்பி வைக்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகளில் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.