காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கைலாசநாதர் கோயில் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் 5க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் தங்கியிருந்து காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பைக்கில் வந்த 5 பேர், காய்கறி வியாபாரிகளை சரமாரி பைப், உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதில், சின்ன காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியை சேர்ந்த ரஜினி (35) என்கிற சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவரது நண்பர் நொண்டி முனியாண்டி (47) படுகாயம் அடைந்தார்.