சின்னசேலம்: சின்னசேலத்தில் கொரோனா அச்சம் காரணமாக வியாபாரி ஒருவர் தனது கடையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுக்களை கிருமிநாசினியால் கழுவி அதன் பின்னரே வாங்கி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கடைவீதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கை கழுவ தண்ணீருடன் தனி வாளி வைத்துள்ளனர். இந்நிலையில் ஒரு கடையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுகளை கடை உரிமையாளர் வாங்கி கிருமி நாசினியில் 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் தண்ணீரில் அலசி காயவைத்து கல்லாவில் வைக்கின்றார்.