பெங்களூரு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் 35 சதவீதத்தினருக்கு மேல் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். இதனால், இவர்களின் ரத்தத்தில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து, புதிதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் குணமாகும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிகிச்சை திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தி, பல நோயாளிகளை குணமாக்கி உள்ளது. கர்நாடகாவிலும் கடந்த மாதம் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை தொடங்கி வைக்கப்பட்டது.