பீஜிங்: வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இங்குள்ள 1.10 கோடி பேருக்கும் வைரஸ் பரிசோதனை நடத்தி விடும் முடிவுக்கு சீனா வந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் 82,919 பேர் பாதித்துள்ளனர். இதுவரையில் 4,633 பேர் பலியாகி உள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த இங்கு ஒரு மாதமாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த ஞாயிறு, திங்கட் கிழமைகளில் வுகான் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா மீண்டும் பரவுமோ என்ற அச்சம், சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது.