புதுடெல்லி: சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்., உள்ளிட்ட துணை ராணுவ படையினருக்கான உணவகங்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு துணை ராணுவ படையினரின் உணவகங்களில், ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா பாதிப்பில் நாடு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.