உலக செவிலியர் தினம் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை அளித்து வரும் நர்ஸ்களுக்கு போன் ெசய்து பாராட்டியுள்ளார் நடிகர் மோகன்லால். செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை, கொரோனா தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் செவிலியர் தினத்தன்று பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் செவிலியர்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால், கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் சில பேருக்கு திடீரென செல்போனில் அழைத்தார்.