கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டது எதிர்பாராதது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டது எதிர்பாராதது ஆகும். மருத்துவ பணியாளர்கள் இரக்கமற்ற முறையில் செயல்பட்டதாக கருத கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: