கூடலூர்: கொரோனா ஊரடங்கால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இ.பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செல்வதற்கு இ.பாஸ் பெற்றவர்களின் சான்றிதழ்களை தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சரிபார்த்து, பதிவு செய்து அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சோதனைச்சாவடியில் ஆட்கள் பற்றாக்குறையால், இ.பாஸ் பெற்றுச் செல்பவர்களின் சான்றிதழ் சரிபார்த்து தனித்தனி பதிவேடுகளில் பதிவு செய்ய, அதிக நேரமாவதாகவும், இ.பாஸ் பெற்றவர்கள் பலமணிநேரம் காத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.