ஊட்டி: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்தியில் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த சுகாதார செவிலியர்களை பூ கொடுத்தும், இருபுறமும் நின்று கை தட்டி வரவேற்று தோட்டக்கலைத்துறை அசத்தியது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் முழுைமயாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்டறியும் பணிகளில் கிராம சுகாதார செவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக கண்காணிப்பு பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் சுகாதார செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். நீலகிரியில் சுகாதார பணிகளில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள், ெசவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மன அழுத்ததில் இருந்து விடுபட்டு புத்துணர்வு அளிக்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அழைத்து சென்று பார்வையிட மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் ஆலோசனையின்படி தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்தது.