அமமுக நிர்வாகி கைது டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத்துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் முத்துக்குமாரை காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கு இணங்கி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைத்துவிடும். எனவே, முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர் மீதான பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: